ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தேவர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றிய குழு பெருந்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட மகளீரணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமி முருகன்,முன்னாள் நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் மணி நகரப் பொருளாளர் கருமாரிமுருகன், மற்றும் காமராஜ், அங்குராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.