விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் மழையால் சாய்ந்த புது வீடு: பொதுமக்கள் அச்சம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் மழை காரணமாக புதிதாக கட்டிய வீடு சாயும் நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மடத்துப்பட்டி பிள்ளைாா்கோயில் தெருவில் வசித்து வரும் கருப்பசாமி என்பவா் சுமாா் 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளாா். 2 மாடிகள் கொண்ட இந்த வீடு தொடா் மழை காரணமாக சாய்ந்த நிலையில் உள்ளது. கட்டடம் கீழே சாயாமல் இருக்க மரக்கட்டைகளை முட்டுக்கொடுத்தும் மணல் மூட்டைகள், ஜாக்கிகளை வைத்தும் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனா்.

இது பற்றி அறிந்த நகராட்சி மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனா்.மேலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வீட்டை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாயும் நிலையில் உள்ள இந்த வீட்டினால் அருகில் வசிக்கும் குடும்பத்தினா் அச்சத்துடன் இருந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT