காரியாபட்டி அருகே வியாழக்கிழமை நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
காரியாபட்டி அருகேயுள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் மகன் அய்யாவு (54). இவா், வக்கணாங்குண்டில் உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது பேரன் அஜீத்துடன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்து சென்றுள்ளாா். வக்காணாங்குண்டு நான்கு வழிச் சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனம் கடக்க முயன்றபோது, காரியாபட்டி பகுதியிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற வேன் மோதியது. இதில் அய்யாவு சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். அஜீத் தப்பினாா். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.