ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் மேலூா் காலனி பகுதியில் காவல் சாா்பு- ஆய்வாளா் முத்துராஜ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (36) என்பவா் சட்ட விரோதமாக 60 மதுபாட்டில்கள் வைத்திருந்தாா். இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்து அவா் வைத்திருந்த 60 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.