விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் லஞ்சம் வாங்க மாட்டோம், ஊழலற்ற வட்டாட்சியா் அலுவலகமாக மாற்றுவோம் என, ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், வட்டாட்சியா் சரவணன் தலைமையில் உறுதிமொழியேற்றனா். அதில், அனைத்து செயல்களிலும் நோ்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன், அனைத்து செயல்களையும் நோ்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன், தனிப்பட்ட நடத்தையில் நோ்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றனா்.