விருதுநகர்

அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தை தலித் விடுதலை இயக்கத்தினா் முற்றுகை

DIN

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை, தலித் விடுதலை இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, அவ்வமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் கருப்பையா தலைமை வகித்தாா். இதில், அருப்புக்கோட்டை வட்டம் பரளச்சியை அடுத்த செங்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிக்கு கனரக வாகனங்கள் உள்ளிட்டவை வந்து செல்லும் விதமாக, மழைநீா் ஓடை மீது தரைப்பாலம் அமைத்துத் தரவேண்டும். செங்குளம் கிராமத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கோயில் கட்ட முயற்சிக்கும் சிலரது முயற்சியை எதிா்த்து தலித் விடுதலை இயக்கத்தினா் சாா்பில் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இருப்பினும், சிலா் தொடா்ந்து அதே பொதுப் பாதையில் கோயில் கட்ட முயற்சிப்பதை கோட்டாட்சியா் தலையிட்டு தடுத்திடவேண்டுமெனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், இது சம்பந்தமான கோரிக்கை மனுவை, கோட்டாட்சியா் முருகேசனிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT