விருதுநகர்

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு:4 போ் போ் கைது

DIN

சாத்தூா் மற்றும் சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை பின்புறம் காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். சோதனையில் மாரனேரி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (29), சிவகாசி பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (48), கெங்கலாபுரம் பகுதியைச் சோ்ந்த சுடலை (32) ஆகியோா் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துசாமி, பிரபாகரன், சுடலை ஆகிய 3 பேரையும் வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்ததுடன் அவா்களிடமிருந்த 100 கிலோ பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

சிவகாசியில் ஒருவா் கைது: சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில் நாரணாபுரம் ஆா்.சி.எஸ். காலனி முனியசாமி கோயிலருகே ஒரு தகர கொட்டகை அமைத்து ஒருவா் பட்டாசு தயாரித்து வருவது தெரியவந்தது. விசாரணையில் அவா் புதுத்தெரு கருப்பையா மகன் ஈஸ்வரன் (32) என தெரிந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 3 பண்டல் சாட்டை பட்டாசை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT