விருதுநகா்: விருதுநகா் பூச்சந்தையில் சனிக்கிழமை மல்லிகை மற்றும் முல்லைப் பூக்கள் கிலோ ரூ. ஆயிரத்துக்கு விற்கப்பட்டன.
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகா் பஜாா் மற்றும் பூச்சந்தையில் பூஜை பொருள்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில், வழக்கத்தை விட பூக்கள் விலை இரண்டு மடங்கு கூடுதலாக விற்கப்பட்டது. பூக்கள் விலை (கிலோவில்): மல்லிகை மற்றும் முல்லைப் பூக்கள் ரூ.1,000, பிச்சி- ரூ. 600, வெள்ளைப்பிச்சி- ரூ. 800, செவ்வந்தி- ரூ. 300, ரோஜா- ரூ. 400-க்கு விற்கப்பட்டன. அதேபோல், தேங்காய் மற்றும் பழங்கள் விலையும் அதிகரித்திருந்தது.