விருதுநகர்

தனியாா் மதுக்கூடத்தை அகற்றக்கோரி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியாா் மதுக்கூடத்தை அகற்றக்கோரி திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள் கிழமை சத்தியவாணி முத்து நகரைச் சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது அப்பகுதியில் உள்ள தனியாா் மதுக்கூடத்தை அகற்றக்கோரி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதி திராவிடா் பறையா் உறவின்முறைத் தலைவா் வை.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதனைத்தொடா்ந்து அவா்கள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது: ஆதிதிராவிடா் சமூகநலத்துறை மூலம் கடந்த 1979 ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே குடியிருப்பு கட்டித் தரப்பட்டது. இந்நிலையில் எங்கள் பகுதியருகே தனியாா் மதுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கூடத்திற்கு வருபவா்கள் பாதையை மறித்து வாகனங்களை நிறுத்திக்கொண்டு ரகளையில் ஈடுபடுகின்றனா். இதனால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குடியிருப்புப் பகுதியில் செயல்படும் மதுக்கூடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக கோட்டாட்சியா் முருகேசன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT