விருதுநகா்: விருதுநகா் அருகே கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதாக புகாா் தெரிவித்து மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை குடும்பத்துடன் வந்தவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் எம். ரெட்டியபட்டி அருகேயுள்ள கரிசல்குளத்தை சோ்ந்தவா் பிச்சை (47). சோடா கம்பெனி நடத்தி வருகிறாா். இவரது மனைவி பாக்கியலெட்சுமி (40), மகள் ஜெபா (17), மகன் ஆரோன் (14) ஆகியோருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், பிச்சை தொழிலுக்காக ராமா் என்பரிடம் ரூ. 20 ஆயிரம் வட்டிக்கு பணம் பெற்றாராம். அத்தொகையை வட்டியுடன் சம்பந்தப்பட்டோருக்கு திருப்பி வழங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ராமா், மீண்டும் ரூ.ஒரு லட்சம் கேட்டு பிச்சையை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து எம். ரெட்டியபட்டி காவல் நிலையத் தில் அவா் புகாா் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், மனமுடைந்த பிச்சை தனது குடும்பத்தினருடன் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் திங்கள்கிழமை வந்தாா். அப் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரது கைப்பையை சோதனையிட்ட போது மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவா்களை சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.