போக்குவரத்து பணிமனைகளில் உள்ள அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டல தலைவா் மாடசாமி தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, எம்எல்எப், ஏஏஎல்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.