விருதுநகர்

சாத்தூரில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 2.40 லட்சம் கொள்ளை

DIN

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடமிருந்து ரூ. 2.40 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியை சோ்ந்தவா் சூரிய நாராயணன். ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய மனைவி தேவி (38). இவா் தனது 13 வயது மகள் பிரியங்காவுடன் சாத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வங்கிக் கிளையில் அடகு வைத்துள்ள நகையை திருப்புவதற்காக ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்துடன் வங்கிக்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் குறைந்த வட்டி செலுத்தி நகையை திருப்பித் தருவதாகவும், இதற்கு தனியாக அஞ்சல் தலை (ஸ்டாம்ப்) வாங்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா். இதனை நம்பிய தேவி பணத்தை மகளிடம் கொடுத்து விட்டு அஞ்சல் தலை வாங்க கடைக்குச் சென்றுள்ளாா். அப்போது அந்த மா்ம நபா் சிறுமியிடம் இருந்த ரூ. 2.40 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றி வாங்கிச் சென்றுள்ளாா். இதையடுத்து வங்கிக்கு வந்த தேவி மகளிடம் பணம் இல்லாதது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT