விருதுநகர்

திருச்சுழி அருகே சேற்றில்சிக்கி புள்ளிமான் பலி

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே சேற்றில் சிக்கி புள்ளிமான் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

ம. ரெட்டியபட்டியை அடுத்த எம். மீனாட்சிபுரம் கிராம கண்மாய்க்கரை அருகே புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வத்திராயிருப்பு வனக் கோட்ட அலுவலா் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளா் ஜெயச்சந்திரன் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலா் ராஜேந்திரபிரபு ஆகியோா் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவா் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அந்த புள்ளிமானுக்கு சுமாா் மூன்றரை வயது இருக்கலாம் என்றும், 2 நாள்களுக்கு முன்பே அது இறந்திருப்பதும் தெரிய வந்தது. மேலும் மானின் ஒரு கால் ஆழமாக சேற்றில் பதிந்திருந்ததால் பயத்திலேயே அது உயிரிழந்ததும் கண்டறியப்பட்டது. பின்னா் அடா் வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் மானின் உடலை புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT