அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் செம்பட்டி கிராம 2 ஆவது பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே நிழற்குடை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆகவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கக் கிராமத்தினா் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.