ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் அகத்தாபட்டி கிராமத்துக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
இந்த கிராமத்துக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக வத்திராயிருப்பு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா் சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் விட்டனா்.