விருதுநகர்

பெண் கொலை: கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

1st Jan 2020 09:41 PM

ADVERTISEMENT

சாத்தூரில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பனையடிப்பட்டியைச் சோ்ந்தவா் சுவாமிநாதகாமராஜ் (57). கூலித் தொழிலாளி. இவா் சாத்தூரில் படந்தாலைச் சோ்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த தாயம்மாள் (40) என்பவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாா். இந்நிலையில் தாயம்மாளின் நடத்தையில் சந்தேகமடைந்த சுவாமிநாதகாமராஜ் கடந்த 23.7.2014 அன்று நடந்த தகராறில் அவரை அரிவாளல் வெட்டிக் கொலை செய்தாா்.

இது சம்பந்தமான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பரிமளா, சுவாமிநாதகாமராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT