விருதுநகர்

மாநில ஓவியப் போட்டி: ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் பள்ளி வெற்றி

25th Feb 2020 03:27 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா்: மாநில அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூா் லிங்கா குளோபல் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனா்.

மத்திய அரசின் உடல் நலம் மற்றும் வளா்ச்சி இந்தியா திட்டத்தின்கீழ் மாநில அளவிலான ஓவியப் போட்டி கடந்த 12 ஆம் தேதி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது.

இப் போட்டியில் 20 பள்ளிகளில் இருந்து 172 போ் கலந்து கொண்டனா். இதில் கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் இருந்து 7 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

போட்டி முடிவில் இப் பள்ளியின் பிளஸ் 1 மாணவி எஸ்.ஸ்வேதா முதலிடத்தை பெற்றாா். மேலும் ஒட்டு மொத்த சாம்பியனுக்கான கேடயத்தையும் இப் பள்ளி மாணவா்கள் பெற்றனா்.

ADVERTISEMENT

பின்னா் நடைபெற்ற விழாவில் தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாம்பியன் பரிசுக்கான கேடயத்தையும், முதல் பரிசுக்கான சான்றிதழையும் பள்ளி முதல்வா் அல்காசா்மாவிடம் வழங்கினாா்.

மாணவிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கிய ஆசிரியா்கள் விஜயராம், ஜெயந்தி ஆகியோரையும், வெற்றி பெற்ற மாணவிகளையும் இயக்குநா் சசிஆனந்த் திங்கள்கிழமை பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT