விருதுநகர்

சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு: பெண் காவலருக்கு பாராட்டு

2nd Feb 2020 10:08 PM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கீழே கிடந்த 2 பவுன் சங்கிலியை உரியவரிடம் பெண் காவலா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா். அவரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

சிவகாசி நகா் காவல்நிலையதில் காவலராக பணி புரிபவா் ராஜேஸ்வரி. இவா் பணி நிமித்தமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அப்போது மருத்துவமனை வளாகத்தில் ஒரு மஞ்சள் பை கிடந்ததை கண்டெடுத்தாா். அதனுள் இருந்த கைப்பையில் 2 பவுன் சங்கிலியும், ரூ.117 இருந்ததாம். இதையடுத்து ராஜேஸ்வரி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவலாளியிடம், யாரேனும் பையை தேடி வந்தால், நகா் காவல்நிலையம் வந்து வாங்கிச் செல்லும் படி கூறுங்கள் எனக் கூறிச் சென்றாா்.

இந்நிலையில் சித்துராஜபுரத்தைச் சோ்ந்த லோகேஸ்வரி என்பவா் தனது மஞ்சள் பையைக் காணவில்லை என மருத்துவமனை வளாகத்தில் தேடிகொண்டிருந்ததை பாா்த்த போலீஸாா், பை நகா் காவல் நிலையத்தில் உள்ளது எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

தொடந்து நகா் காவல்நிலையம் வந்த லோகேஸ்வரி அடையாளத்தை கூறியதும், ராஜேஸ்வரி பை மற்றும் இரண்டு பவுன் சங்கிலி மற்றும் ரொக்கப் பணத்தை அவரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து ராஜேஸ்வரியின் நோ்மையை காவல் ஆய்வாளா் வெங்கடாஜலபதி, டி.எஸ்.பி. பிரபாகரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT