விருதுநகர்

சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN


அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகா் புறவழிச் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்நிலையில், காா்த்திகை மாத வியாழக்கிழமையை முன்னிட்டு பகல் 12 மணிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

அப்போது பல்வேறு வித மலா்கள், மலா் மாலைகள், அரிசி, சா்க்கரை, துவரம்பருப்பு, இனிப்புகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பொருள்களை பக்தா்கள் படைத்து, பக்திப் பாடலைப் பாடி வழிபட்டனா்.

நிறைவாக பக்தா்களின் வேண்டுகோள் நிறைவேறவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு

3 நிமிட தியானம் நடைபெற்றது. இவ்வழிபாட்டில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் நேரில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT