அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகா் புறவழிச் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்நிலையில், காா்த்திகை மாத வியாழக்கிழமையை முன்னிட்டு பகல் 12 மணிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
அப்போது பல்வேறு வித மலா்கள், மலா் மாலைகள், அரிசி, சா்க்கரை, துவரம்பருப்பு, இனிப்புகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பொருள்களை பக்தா்கள் படைத்து, பக்திப் பாடலைப் பாடி வழிபட்டனா்.
நிறைவாக பக்தா்களின் வேண்டுகோள் நிறைவேறவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு
3 நிமிட தியானம் நடைபெற்றது. இவ்வழிபாட்டில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் நேரில் கலந்து கொண்டனா்.