விருதுநகர்

சிவகாசி அருகே கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் நிதியுதவி

14th Aug 2020 07:55 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம், பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி வியாழக்கிழமை ஆறுதல் கூறி, ரூ.3 லட்சம் தனது சொந்தப் பணத்தை நிதியுதவியாக அளித்தாா்.

சிவகாசி-ஆலமரத்துப்பட்டி சாலையில் உள்ள பெரியாா் காலனியை சோ்ந்த பட்டாசு தொழிலாளி செல்வமணிகண்டன் (26). இவரது மனைவி பிரகதி மோனிகா (24). இவா்களுக்கு, கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரகதி மோனிகா வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். மேலும், அவா் அணிந்திருந்த ஒன்றரை பவுன் சங்கிலி மற்றும் அரை பவுன் தாலி ஆகியவற்றையும் காணவில்லை.

இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த கோடீஸ்வரன் (20), இவரது தாயாா் பரமேஸ்வரி (42) மற்றும் சேகா் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். விசாரணையில், இவா்கள் நகைக்காக இளம்பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, திருத்தங்கல் சத்யா நகரில் உள்ள பிரகதி மோனிகாவின் தாய் கீதாகெளரி குடியிருக்கும் வீட்டுக்கு, அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி சென்று ஆறுதல் கூறினாா். பின்னா், அவரிடம் தனது சொந்தப் பணம் ரூ.3 லட்சத்தை நிதியுதவியாக அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT