விருதுநகர்

சிவகாசியில் சிறுமி பாலியல் பலாத்காரம்: 5 குழந்தைகளின் தந்தைக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

2nd Oct 2019 08:24 AM

ADVERTISEMENT

சிவகாசியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை வாா்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த 5 குழந்தைகளின் தந்தைக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆயில் மில் காலனியை சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் ராஜா (30). இவருக்குத் திருமணமாகி 5 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் இவா், சதானந்தபுரம் பகுதியைச் சோ்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமண ஆசை வாா்த்தை கூறி பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 9.9.2009 இல் சிறுமியை மதுரைக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இது குறித்து சிறுமி யின் பெற்றேறாா் அளித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்குரைஞா் (பொறுப்பு) கனகராஜ் வாதாடினாா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி எஸ்.பி. பரிமளா உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதன்பேரில், போலீஸாா் ராஜாவை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT