விருதுநகர்

சிவகாசி அருகே மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

22nd Nov 2019 09:24 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை வருவாய்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியில், சிவகாசி வட்டாட்சியா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மணல் பாரத்துடன் வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்தனா். அப்போது, அதில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவா் திருத்தங்கலைச் சோ்ந்த காசி(38) எனவும் தெரியவந்தது.

இதையடுத்து வருவாய்துறையினா் டிராக்டரை பறிமுதல் செய்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து கிராமநிா்வாக அலுவலா் கணேசன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT