மீசலூரில் வீசிய சூறாவளியால் 3 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

விருதுநகர் அருகே மீசலூரில் திங்கள்கிழமை இரவு  சூறைக் காற்றுடன் பெய்த  மழையால், அப்பகுதியில் 3

விருதுநகர் அருகே மீசலூரில் திங்கள்கிழமை இரவு  சூறைக் காற்றுடன் பெய்த  மழையால், அப்பகுதியில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.
விருதுநகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் அதிகரித்துள்ளது. 
 இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில், "பானி' புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மழையளவு 11.50 மி.மீ. ஆக பதிவாகி இருந்தது. 
இந்நிலையில், சூறாவளிக் காற்றால் மீசலூர் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மூலம் சுமார் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே அரசு சார்பில் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com