செவித்திறனற்றோர் பள்ளி  நூறு சதவீதம் தேர்ச்சி

மானாமதுரையில் உள்ள சிஎஸ்ஐ செவித்திறனற்றோர் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பத்தாம் வகுப்பு

மானாமதுரையில் உள்ள சிஎஸ்ஐ செவித்திறனற்றோர் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அவர்களைப் பாராட்டினார்.
இப்பள்ளியில் பயின்ற 14 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு  அரசு பொதுத்தேர்வினை எழுதினர். திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், 14 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதையொட்டி, அப்பள்ளியின் தாளாளர் சாமிதாஸ், தலைமையாசிரியை மெர்சி ஜெயசீலி மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 மாணவ, மாணவிகள் அனைவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது ஆட்சியர் அனைவரையும் வாழ்த்தி, பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com