சிவகாசியில் டயர் வெடித்து இளைஞர் பலி

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை டயர் வெடித் து இளைஞர் உயிரிழந்தார். 

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை டயர் வெடித் து இளைஞர் உயிரிழந்தார். 
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த கண்ணன்  மாட்டு வண்டி வைத்துள்ளார். இவர் செவ்வாய்க்கிழமை தனது மாட்டுவண்டியில் வேலாயுதம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டியின் ஒரு டயர் "பஞ்சர்' ஆகிவிட்டது.
இதனையடுத்து  "பஞ்சர்' பார்க்கும் கடை வைத்துள்ள  குமாரலிங்காபுரம் பலராமன் (34) என்பவரிடம்,  டயரை பஞ்சர்பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து பலராமன், டயரை "பஞ்சர்' பார்த்துவிட்டு, இயந்திரம் மூலம் காற்று பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக டயர் வெடித்தது. இதில் பலராமன் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com