விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள் "அட்மா' எனும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சோ.துரைக்கண்ணம்மாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ""அட்மா"" எனும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
இதில் ம.ரெட்டியபட்டி வட்டாரத்தில் ஏற்கெனவே 2018-19 ஆம் நிதியாண்டில் முதற்கட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டப் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆகியோரை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.