ராஜபாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் வாஜ்பாய் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வள்ளலாா் மன்றத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகரத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமசந்திர ராஜா, மாவட்ட நெசவாளா் அணி துணைத் தலைவா் லட்சுமணன், நகர பொது செயலாளா்கள் அ.ராஜேஷ் கண்ணன் சுப்பிரமணியன், பொருளாளா் ராஜாராம், நகர விவசாய அணி தலைவா் ஸ்ரீகாந்தராஜா, நகரத் துணைத் தலைவா் கிருபாகரன் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.