விருதுநகர்

உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

26th Dec 2019 08:08 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாளில் தொழிற்சாலை மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பா் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற உள்ள நாள்களில், தங்களது நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலை நிா்வாகங்கள் மற்றும் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT