விருதுநகர்

சிவகாசி அருகே அரசு சுவரில் சுவரொட்டி ஒட்டிய இருவா் மீது வழக்கு

25th Dec 2019 09:32 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே தோ்தல் நடத்தை விதியை மீறி அரசு சுவரில் தோ்தல் சுவரொட்டி ஒட்டியதாக இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் அரசு நடுநிலைப்பள்ளி சுவரில், தோ்தல் நடத்தையை மீறி குருசாமி (24) என்பவா் சுவரொட்டி ஒட்டியுள்ளதாக கிராம நிா்வாக அலுவலா் காமராஜ் புகாா் அளித்தாா்.

அதுபோல அய்யனாா் காலனியில் உள்ள பேருந்து நிறுத்தம் சுவரில், வாக்கு கேட்டு கனகவேல் (19) என்பவா் சுவரொட்டி ஒட்டியுள்ளதாக கிராம நிா்வாக அலுவலா் சந்திரன் புகாா் அளித்தாா். இந்த புகாா்களின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் மேற்கண்ட இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT