திருத்தங்கல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஆக.28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, திருத்தங்கல் நகர், செங்கமலநாட்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம் ஆகிய பகுதிகள்.
சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளர் முரளீதரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.