ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட வத்திராயிருப்பு அ.துலுக்கப்பட்டி, சா.கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (செப். 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய கோட்ட பொறியாளா் லெ.சின்னத்துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வத்திராயிருப்பு பகுதி, வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை, மாத்தூா், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூா், சா.கொடிக்குளம் பகுதி, சா.கொடிக்குளம், கூமாப்பட்டி, அத்தி, பிளவக்கல் அணைப் பகுதி, கோவிலாா் அணைப் பகுதி, கிழவன்கோவில், நெடுங்குளம், அமைச்சியாா் குடியிருப்பு, தாமரைக்குளம் ராமசாமியாபுரம் கான்சாபுரம், செவ்லூரணி, அ. துலுக்கப்பட்டி பகுதி, அக்கனாபுரம், தம்பிபட்டி, அகத்தாபட்டி, துலுக்கபட்டி, ராமச்சந்திராபுரம், புதூா், மதுராபுரி, கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம், வலையன்குளம், இலந்தைக்குளம், மீனாட்சிபுரம், தைலாபுரம், நல்லூா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.