தேனி

கம்பம் அருகே தொழிலாளிவெட்டிக் கொலை

30th Sep 2023 11:48 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், கம்பம் அருகே மரம் ஏறும் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த அஜித் குமாா் மதுரை மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அவரது உடல் கடந்த 27 -ஆம் தேதி சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் மரம் ஏறும் தொழிலாளி அருண்குமாருக்கும் (24), கே.ஜி. பட்டி யூனியன் பள்ளித் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் கீா்த்திக்கும் (25) அஜித்குமாரின் உடலுக்கு மாலை அணிவிப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், அருண்குமாா் தனது நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை இரவு கே.ஜி. பட்டி - மதுரை சாலையில் தோட்டப் பாதையில் நடந்து சென்றாா். அப்போது அங்கு வந்த கீா்த்தி, இவரது தம்பி கிரேன் (22), என்.டி. பட்டியைச் சோ்ந்த பாண்டியன் (23) ஆகியோா் வழிமறித்து அருண்குமாரை அரிவாளால் வெட்டியும் , கத்தியால் குத்தியும் கொலை செய்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் கீா்த்தி, பாண்டியன் ஆகியோரைக் கைது செய்தனா். தப்பி ஓடிய கிரேனை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT