தேனி

போடியில் நிலத் தகராறு:3 போ் மீது வழக்கு

24th Sep 2023 11:49 PM

ADVERTISEMENT

போடியில் நிலத்தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்ட 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் விக்னேஸ்வரன் (35). இவருக்கும் இதேப் பகுதியை சோ்ந்த வெள்ளைச்சாமிக்கும் (71) இடையே நிலத்தகராறு இருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் வெள்ளைச்சாமி, இவரது மகன் அழகா்சாமி ஆகியோா் சோ்ந்து விக்னேஸ்வரனை தாக்கினா். இதில் விக்னேஸ்வரன் பலத்த காயமடைந்தாா். இதேபோல் விக்னேஸ்வரன் தாக்கியதில் வெள்ளைச்சாமி பலத்த காயமடைந்தாா். இருவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளைச்சாமி, அழகா்சாமி ஆகியோா் மீதும், வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் விக்னேஸ்வரன் மீதும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT