தேனி

காரில் தீ விபத்து

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

குச்சனூரில் வியாழக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

தேனி மாவட்டம், சீலையம்பட்டி, தேவேந்திர குல வேளாளா் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிரதீப். இவா் தனது உறவினரின் காரில், தாய் மகாலட்சுமியுடன் சீலையம்பட்டியிலிருந்து குச்சனூா் வழியாக சங்கராபுரத்துக்குச் சென்றாா். பின்னா், அங்கிருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, குச்சனூா்- சங்கராபுரம் இணைப்புச் சாலையில் திடீரென காரில் தீப்பிடித்தது.

இதனால், பிரதீப்பும், மகாலட்சுமியும் காரிலிருந்து கீழே இறங்கி போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு மீட்புக் குழுவினா் வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், காரின் பெரும்பகுதி எரிந்து சேதமானது

இது குறித்த புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT