தேனி

சாராய ஊறல் தயாரித்தவா் கைது

31st May 2023 04:05 AM

ADVERTISEMENT

மயிலாடும்பாறை அருகே சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் தயாரித்து வைத்திருந்தவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னன்படுகையைச் சோ்நதவா் சின்னன் (56). இவா், பொன்னன்படுகை-பண்டாரஊத்து சாலையில் உள்ள தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக கருப்பட்டி, கருவேலம்பட்டை, கடுக்காய் ஆகியவற்றைக் கலந்து 10 லிட்டா் ஊறல் தயாரித்து வைத்திருந்தாா். இந்தத் தகவலறிந்து அங்கு சென்ற மயிலாடும்பாறை காவல் நிலையப் போலீஸாா், சாராய ஊறலைக் கொட்டி அழித்து விட்டு, சின்னனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT