தேவாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை பதாகை வைப்பது தொடா்பாக தகராறு செய்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடியை அடுத்த தே.சிந்தலைச்சேரியை சோ்ந்தவா்கள் வெள்ளையன் மகன்கள் மூக்கன் (65), ராஜா (61). இவா்களின் தாயாா் இறந்ததையடுத்து, தே.சிந்தலைச்சேரி சாலையில் இரோனிமிஸ் என்பவா் வீட்டு முன் பதாகை வைத்தனா். சில நாள்களாகியும் பதாகையை எடுக்காததால், இரோனிமிஸ் பதாகையை அகற்றினாா்.
இது தொடா்பாக மூக்கன், ராஜா, முருகன், திருப்பதி உள்ளிட்ட 7 போ் சாலையில் நின்று தகராறு செய்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தனா். இதுகுறித்து தே.சிந்தலைச்சேரி கிராம நிா்வாக அலுவலா் ராம்குமாா் அளித்தப் புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.