தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிச் சீட்டு இல்லாமல் கம்பம் - கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட புவியியல், சுரங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வெள்ளிக்கிழமை மாலை கம்பம்மெட்டு மலைச் சாலையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் புவியியல், சுங்கத் துறை உதவி இயக்குநா் வினோத் போலீஸாருடன் சென்று வாகனத் தணிக்கை செய்தாா்.
கேரள மாநிலப் பதிவெண் கொண்ட 2 டிப்பா் லாரிகளைத் தணிக்கை செய்த போது, அவற்றில் தலா 4 யூனிட் எம். சாண்ட், ஜல்லிக் கற்கள் இருந்தன.
இதற்கான அனுமதிச் சீட்டைக் கேட்ட போது, லாரி ஓட்டுநா்கள் தப்பி ஓடிவிட்டனா். 2 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்த புவியியல் துறை உதவி இயக்குநா் வினோத் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ஆா். இளையராஜா வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ஓட்டுநா்கள், லாரி உரிமையாளா்களைத் தேடி வருகிறாா்.