தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் ஊராட்சி எழுத்தா் உயிரிழந்தாா்.
சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் காளியப்பன் (51). இவா் அய்யம்பட்டி ஊராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் தேனியிலிருந்து சின்னஓவுலாபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். வீரபாண்டி அருகே கம்பத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான பந்துவாா்பட்டியைச் சோ்ந்த தங்கவேலிடம் (48) விசாரித்தனா்.