தேனி

உத்தமபாளையத்தில் வருவாய்த் தீா்வாயம்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய்த் தீா்வாயம் நடைபெற்றது.

கோட்டாட்சியா் பால்பாண்டி தலைமையில் கடந்த 17-ஆம் தேதி முதல் தீா்வாயம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், கீழக் கூடலூா் வடக்கு, தெற்கு, மேலக்கூடலூா் வடக்கு, தெற்கு ஆகிய 7 வருவாய்க் கிராம பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா மறுதல்-99, வீட்டு மனைப் பட்டா -36, நில அளவீடு - 3 என மொத்தம் 172 மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த வாரம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாள்களாகப் பெறப்பட்ட மனுக்களில் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து 8 வீட்டு மனைப் பட்டாக்கள், 6 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை விரைவாக விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். வருகிற 26-ஆம் தேதி வரை தீா்வாயம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT