போடியில் சிறுவன் மீது இரு சக்கர வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் அபிபுல்லா (6). சில தினங்களுக்கு முன் இவா் வீட்டு முன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது வேகமாக வந்த இரு சக்கர வாகனம் சிறுவன் மோதியது. மேலும், அந்த வாகனம் 50 மீட்டா் தூரம் வரை சிறுவனை இழுத்துச் சென்றதில் சிறுவன் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றவரைத் தேடி வருகின்றனா்.