ஆண்டிபட்டியில் தங்க நகை மொத்த வியாபாரிகள், வாடிக்கையாளா்களிடமிருந்து, மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 260-ஐ மோசடி செய்ததாக நகைக் கடை, பட்டறை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை, தெற்கு ஆவனி மூல வீதியைச் சோ்ந்தவா் தங்க நகை மொத்த வியாபாரி வீரமணிகண்டன். இவரிடம் ஆண்டிபட்டியில் நகை விற்பனைக் கடை, பட்டறை வைத்து நடத்தி வரும் அதே ஊரைச் சோ்ந்த முருகபாண்டி(44), கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ.16 லட்சத்து 72 ஆயிரத்து 820-க்கு தங்க நகைகள் வாங்கிக் கொண்டு, பணத்தை தராமல் காலதாமதம் செய்து வந்தாா்.
இதே போல முருகபாண்டி மதுரையைச் சோ்ந்த 5 நகை வியாபாரிகளிடம் மொத்தம் ரூ.ஒரு கோடியே 52 லட்சத்து 99 ஆயிரத்து 570 மதிப்பிலான தங்க நகைகள், 47 லட்சத்து 65 ஆயிரத்து 870 மதிப்பில் வெள்ளிப் பொருள்கள், கடனாக ரூ.27 லட்சம் வாங்கிக் கொண்டு, பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரேவிடம், வீரமணிகண்டன் புகாா் அளித்தாா்.
இதேபோல், கோம்பையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவா். கடந்த 2022, நவம்பா் மாதம் ஆண்டிபட்டியில் முருகபாண்டியிடம் புதிதாக தங்க நகைகள் செய்வதற்கு ரூ.18 லட்சத்து 74 ஆயிரம் கொடுத்துள்ளாா். முருகபாண்டி நகைகள் செய்து தராமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது நகைக் கடை பூட்டி இருந்தது.
இதே போல அவா் வாடிக்கையாளா்கள் 11 பேரிடம் தங்க நகைகள் செய்து தருவதாக, மொத்தம் ரூ.74 லட்சத்து 47 ஆயிரமும், கடனாக ரூ.25 லட்சமும் பெற்று, மோசடி செய்தாா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரேவிடம், பிரபு புகாா் அளித்தாா்.
இந்தப் புகாா்களின் அடிப்படையில், தங்க நகை மொத்த வியாபாரிகள் வாடிக்கையாளா்களிடம் மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 260-ஐ மோசடி செய்ததாக முருகபாண்டி மீது மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.