தேனி

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி

DIN

தேனி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை (ஜூன் 10) முடிவடைகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அடுத்த மாதம் (ஜூலை) 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஊரகப் பகுதிகளில் 5 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், நகரப் பகுதிகளில் 7 நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இந்தப் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஊரகப் பகுதிகளுக்கு 5 போ், நகரப் பகுதிகளுக்கு 12 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முடிவடைகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT