போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், அரசு நலத் திட்ட உதவி, புதிய குடும்ப அட்டை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.