தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தோா் அரசு பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்த தொண்டு நிறுவனம், மருத்துவா்கள், சமூகப் பணியாளா்கள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பளித்த தனியாா் நிறுவனங்களுக்கும் அரசு சாா்பில் தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
தகுதியுள்ளவா்கள் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 என்ற முகவரியில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றுகளை இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தேனி-625531 என்ற முகவரிக்கு வருகிற 26-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.