தேனி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

8th Jun 2023 01:50 AM

ADVERTISEMENT

தேனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பத்திரகாளிபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (73). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு 8, 6 வயது சிறுமிகள் இருவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஐயப்பனை கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கோபிநாதன், ஐயப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT