தேனி மாவட்டம், கம்பம் டி.எஸ்.கே. நகரில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி, கம்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ஷஜீவனா தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் முன்னிலை வகித்தாா்.
இதில் சுகாதார இயக்குநா் போஸ்கோ ராஜா, நகா்மன்றத் துணைத் தலைவா் சுனோதா செல்வக்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் பி. முருகன், ஆணையாளா் ப. பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.