தேனி

மதுபானக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

தேனி கருவேல் நாயக்கன்பட்டியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், கருவேல்நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேனி நகராட்சிக்கு உள்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடையால் விபத்துகள், சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்பட்டன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தக் கடை மூடப்பட்டது.

தற்போது கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே புதிய மதுபானக் கடையைத் திறக்க டாஸ்மாக் நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மதுபானக் கடை திறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

SCROLL FOR NEXT