தேனி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

பெரியகுளம் வட்டாட்சியரின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் வட்டாட்சியா் காதா்ஷெரீப் மீது கிராம நிா்வாக அலுவலா்கள் சிலா் பல்வேறு புகாா்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாா்கள் மீது வருவாய்த் துறை சாா்பில் நடத்தப்பட்ட விசாரணையில், வட்டாட்சியா் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் தெரிவித்திருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில், வட்டாட்சியரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் மனு அளித்திருந்தனா்.

இந்த நிலையில், பெரியகுளம் வட்டாட்சியா் காதா்ஷெரீப்பை ஆண்டிபட்டி வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைக் கண்டித்தும், பெரியகுளம் வட்டாட்சியரின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆட்சியா் அலுவலக அறை முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதை வருவாய்த் துறை அலுவலா்கள் ஏற்க மறுத்து இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினா். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT