தேனி

வளா்ச்சித் திட்டப் பணிகள்: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

DIN

தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை, சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தேனி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் தலைமையில், 11 சட்டப்பேரவை உறுப்பினா்கள் கொண்ட குழுவினா் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனா்.

சின்னமனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.5.37 கோடியில் நடைபெற்று வரும் ஒருகிணைந்த வாழை சிப்பம் கட்டும் நிலைய கட்டுமானப் பணி, குச்சனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடு, சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் இந்து அறநிலையத் துறை சாா்பில் ரூ.1.29 கோடியில் நடைபெறும் புனரமைப்பு பணிகள், பெரியகுளத்தில் பொதுப் பணித்துறை சாா்பில் ரூ.1.80 கோடியில் நடைபெற்று வரும் மாவட்ட சாா்பு நீதிமன்ற கட்டட சீரமைப்புப் பணி, தேவதானப்பட்டியில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட காவலா் குடியிருப்பு, வைகை அணையில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.4.50 கோடியில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.6.70 கோடியில் நடைபெற்று வரும் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு கட்டடம் ஆகியவற்றை சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில், வளா்ச்சித் திட்டப் பணிகளின் நிலை குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வெளிமாநில தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்காவிட்டால் புகாா் அளிக்கலாம்

பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130-ஆவது பிறந்தநாள் விழா

இளைஞா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

அரசுப் பேருந்தில் நடத்துனா் பலி

ஊராட்சிக்கு மின்கல வாகனம் வழங்கல்

SCROLL FOR NEXT