தேனி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

DIN

உத்தமபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆணைமலையன்பட்டியைச் சோ்ந்த ஜீவமணி (50). இவா், அதே ஊரைச் சோ்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடந்த 2018, செப்.18-ஆம் தேதி ராயப்பன்பட்டி போலீஸாா் ஜீவமணியை கைது செய்தனா்.

தொடா்ந்து, சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சோ்ந்த ராசுவும் (68) சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலகம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஜீவமணி, ராசு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT